வியாழன், 4 பிப்ரவரி, 2010

தாமாக பதவி விலகுமாறு திணைக்கள தலைவர்களுக்கு உத்தரவு

அரச நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பு வகிப்பவர்கள் தாமாக தமது பதவியிலிருந்து விலகிச் செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு ஜனாதிபதி செயலகம் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தல்களில் மஹிந்தவுக்கு பங்களிக்காத தலைவர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினை சார்ந்து செயற்பட்டவர்கள் அனைவருக்காகவுமே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக