இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 4 பிப்ரவரி, 2010
சிங்கக் கொடியை ஏற்றுமாறு ஈ.பி.டி.பி யாழ் மக்களை அச்சுறுத்தல்
சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கு சிங்க கொடிகளை வியாபார நிலையங்களிலும் பொதுநிறுவனங்களிலும் மட்டுமல்லாது ஒவ்வொரு வீடுகளிலும் ஏற்றுமாறு ஈபிடிபியின் ”தொண்டர்கள்” வற்புறுத்தி வருவதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நடைபெறவுள்ள சிறிலங்காவின் சுதந்திர நாளை சிறிலங்காவின் பிரதான எதிர்கட்சிகள் அனைத்தும் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ள நிலையில் தமிழர் தேசங்களில் தமது சிங்கள மேலாண்மையை காட்டுவதற்கான முயற்சிக்கு ஈபிடிபி தொண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை யாழ் குடாநாட்டில் குறிப்பிட்டளவு வாக்குகளை கூட மகிந்தவுக்கு பெற்றுக்கொடுக்க முடியாத நிலையினால், தென்னிலங்கை அரசியற் கட்சிகள், ஈபிடிபியை ஒரு பொருட்டாக கருதவேண்டியதில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டதாகவும், அதனால் தான் தற்போது சுதந்திர நாளை அனைத்து இடங்களிலும் கட்டாயப்படுத்தி கொடி ஏற்றிவைத்து தனது பலத்தை காட்ட ஈபிடிபி முற்படுவதாகவும் மேலும் தெரியவருகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக