வியாழன், 4 பிப்ரவரி, 2010

ஜூலைக்குள் அமெரிக்காவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் : உளவுத் துறை எச்சரிக்கை

வருகிற ஜூலை மாதத்திற்குள் அமெரிக்காவில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அந்நாட்டு உளவுத் துறை எச்சரித்துள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ தலைமை அதிகாரி லியோன் பானெட்டா, அமெரிக்க சென்ட் சபையின் புலனாய்வு கமிட்டி முன்னர் ஆஜராகி, நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்த புலனாய்வு தகவல்களை எடுத்துரைத்தார். அப்போது அவர், " ஒஸாமா பின்லேடனும் அவரது கூட்டாளிகளும் பிடிபடும் வரை அல்லது கொல்லப்படும்வரை அமெரிக்கா மீதான அல் - காய்தாவின் தாக்குதல் இலக்கு நீடித்துக்கொண்டுதான் இருக்கும். அடுத்த மூன்று அல்லது ஆறு மாதங்களில் நிச்சயம் அல் - காய்தா இயக்கம் அமெரிக்காவில் தாக்குதல் நடத்த முயற்சிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பின்லேடன் அமெரிக்காவில் பரவலாக தனிநபர்களை அமர்த்த்தியுள்ளார்.அவர்கள் தொடர்ந்து பின்லேடனுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக