இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 5 பிப்ரவரி, 2010
விவாகரத்து கேட்டு 12 வயது சிறுமி வழக்கு
சவுதி அரேபியாவில், 12 வயது சிறுமி ஒருவர், அவரது 80 வயது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கை, தீர்ப்புக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக அவர் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுமார் 22,000 டாலர்கள் பணத்துக்காக இந்த திருமணத்தை ஏற்பாடு செய்த தனது தந்தையை மீற விரும்பவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் கூறியதாக, சவுதி அரேபியாவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
குழந்தைத் திருமணங்கள் மிகவும் அதிகரித்து வரும் அளவில் சர்ச்சைக்குரியதாக மாறிவரும் சவுதி அரேபியாவில், இந்த வழக்கு குறிப்பிடத்தக்க அளவு கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக