இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 5 பிப்ரவரி, 2010
தமிழர் கைது தொடர்பில் அவுஸ்திரேலிய பொலிஸாருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தமிழர் ஒருவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டமை தொடர்பில், அந்த நாட்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிட்னியில் கணக்காளராக பணியாற்றிய ஆறுமுகம் ரஜீவன் என்ற 43 வயதுடைய தமிழரை, கடந்த 2007 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நீதிபதி கோலன் தலைமையில் நடைபெற்றது.கைது செய்யப்படும் போது, தமது பொறுப்புக்களுக்கு மேலதிகமாக பொலிஸ் அதிகாரிகள் செயற்பட கூடாது எனவும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய கூடாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது நிதி வழங்கிய தமிழர்கள், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.
எனினும் அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல், அவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுகின்றமை சட்டத்துக்கு முரணானது என அவர் தெரிவித்துள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக