இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 5 பிப்ரவரி, 2010
மட்டக்களப்பில் 15வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற 25வயதான திருமணமானவர் கைது
வீடொன்றின் மதில் சுவரைக் கட்டுவதற்கு நியமிக்கப்பட்ட 25வயதான திருமணமான நபரொருவர் அவ்வீட்டின் அயல்வீட்டிலிருந்த 15வயதுச் சிறுமியை திருமணம் செய்து கொள்ள முயன்ற சம்பவமொன்று மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசவாசியான குறித்த நபர் மேசன்வேலை செய்பவராவார். சில தினங்களுக்கு முன்பு வெல்லாவெளி பிரதேசத்தில் மன்சூர் பகுதி கிராமத்திலுள்ள வீடொன்றின் சுற்றுமதில் எழுப்புவதற்காக அவர் வந்துள்ளர். இப்பணியில் ஈடுபட்டிருந்த போது அவர் அயல் வீட்டில் தங்கும் இடவசதியை ஏற்படுத்திக் கொண்டு தான் திருமணம் முடிக்காதவர் என்று தெரிவித்து சிறுமியை திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறி திருமணம் பதிவுக்காக பதிவாளரிடம் சென்றுள்ளார். இவர்மீது சந்தேகம் கொண்ட திருமணம் பதிவாளர் மேற்கொண்ட விசாரணைகளின் பின் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பது வெளியானது. இதனையடுத்து அவர் பொலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக