இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 5 பிப்ரவரி, 2010
உளவு தற்கொலைப்படை குண்டு வாகனம் ஒன்றை இந்திய இராணுவம் உருவாக்கியுள்ளது.
தீவிரவாதிகளை தீர்த்துக் கட்டும் 4 சக்கர வாகனம் ஒன்றை, இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தொழில்நுட்பப் பிரிவு உருவாக்கி உள்ளது. இதற்கு „உளவு தற்கொலைப்படை குண்டு வாகனம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படக் கூடியது. 200 மீட்டர் தூரத்தில் இருந்து இதை இயக்ககூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வண்டியில் இரவு நேரத்திலும் காட்சிகளை பதிவு செய்யக்கூடிய வீடியோ கமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
இதில் வெடிகுண்டைப் பொருத்துவதற்காக, ஒரு குழிவான பகுதியும் உள்ளது. இந்த வாகனத்தை தீவிரவாதியின் மறைவிடத்துக்குள் நுழைய வைத்து, 200 மீட்டர் தூரத்தில் இருந்தபடி இயக்கி, குண்டு வெடிக்கச் செய்து தீவிரவாதியை அழிக்கலாம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக