இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 5 பிப்ரவரி, 2010
பொன்சேகா ரஸ்ய வடிவிலான இராணுவப் புரட்சியை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாராம்.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் ரஸ்ய வடிவிலான புரட்சியொன்றை மேற்கொள்ள ஜெனரல் சரத் பொன்சேகா திட்டமிட்டிருந்தாக ஊடகத்துறை அமைச்சர் இன்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். நாட்டின் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்களான பசில் , கோத்தபாய ஆகியோரை கொலை செய்த பின்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குழுக்களை ஜெனரல் பொன்சேகா சகல அரச திணைக்களங்களிலும் நியமித்திருந்தாகவும் அவர்களில் பலர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக