வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

பொன்சேகா ரஸ்ய வடிவிலான இராணுவப் புரட்சியை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாராம்.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் ரஸ்ய வடிவிலான புரட்சியொன்றை மேற்கொள்ள ஜெனரல் சரத் பொன்சேகா திட்டமிட்டிருந்தாக ஊடகத்துறை அமைச்சர் இன்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். நாட்டின் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்களான பசில் , கோத்தபாய ஆகியோரை கொலை செய்த பின்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குழுக்களை ஜெனரல் பொன்சேகா சகல அரச திணைக்களங்களிலும் நியமித்திருந்தாகவும் அவர்களில் பலர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக