வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

யாழில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மற்றும் பலக்லைக்கழகை அனுமதி ஆகியவைற்றை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மற்றும் பலக்லைக்கழகை அனுமதி ஆகியவைற்றை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களை விட பல மடங்கு குறைவான வாக்களார்களே வாக்களித்துள்ளதாகவம் இதனால் அந்த மாவட்டத்தின் புதிதான சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்கா அறிவித்துள்ளார். இதன் மூலம் யாழ் மாவட்டத்தின் சனத்தொகை கணிசமாக குறைவடைந்துள்ளமை ஆவணப்படுத்தப்படவுள்ளது. இதனை அடுத்து பாராளுமன்ற பிரதிநிதித்துவம் சனத்தொகை பரம்பலுக்கு அமைவாக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை புதிய சனத்தொகைக்கு அமைவாக பல்கலைக்கழைகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வெளிமாவட்டங்களில் இருந்து சிங்கள மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரியவந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக