இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 5 பிப்ரவரி, 2010
இராணுவத்திலிருந்து தப்பியோடியிருந்த 1422 பேர் சரண்.
இராணுவத்திலிருந்து தப்பியோடி சேவைக்கு சமூகமளிக்காதிருந்தவர்கள் நேற்று சுதந்திர தினத்தன்று சரணடைந்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமென இராணுவத் தலைமையகம் விடுத்திருந்த அறிவிப்பை ஏற்று 1422 பேர் சரணடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சரணடைந்த அனைவரும் இராணுவ முகாம்களில் உள்ளதாக தெரிவித்துள்ள பிரிகேடியர் சரணடைந்தவர்கள் மீது எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படமாட்டாது எனவும் சரணடைய தவறியுள்ளவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக