வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

இராணுவத்திலிருந்து தப்பியோடியிருந்த 1422 பேர் சரண்.

இராணுவத்திலிருந்து தப்பியோடி சேவைக்கு சமூகமளிக்காதிருந்தவர்கள் நேற்று சுதந்திர தினத்தன்று சரணடைந்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமென இராணுவத் தலைமையகம் விடுத்திருந்த அறிவிப்பை ஏற்று 1422 பேர் சரணடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். சரணடைந்த அனைவரும் இராணுவ முகாம்களில் உள்ளதாக தெரிவித்துள்ள பிரிகேடியர் சரணடைந்தவர்கள் மீது எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படமாட்டாது எனவும் சரணடைய தவறியுள்ளவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக