இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 6 பிப்ரவரி, 2010
இந்தியர் உள்பட 25 பேருடன் கொரியா கப்பல் கடத்தல்
தென் கொரியாவை சேர்ந்த ஒரு சரக்கு கப்பல் 2,405 வாகனங்களை எற்றிக் கொண்டு சவுதிஅரேபியாவில் உள்ள ஜெட்டா துறை முகத்துக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
அதில் இந்தியர்கள் உள்பட 25 ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 8 பேர் பல் கேரியர்கள், 10 பேர் உக்ரைனை சேர்ந்தவர்கள் மற்றும் ருமேனியாவை சேர்ந்தவர்களும் அடங்குவர்.
அரபிக்கடலில் சோமாலியா கடற்கரை பகுதியில் அக்கப்பல் வந்து கொண்டிருந்தது. அப்போது அதை சோமாலியா கடற் கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.
அந்த கப்பலை விடுவிக்க ரூ.78 கோடி பிணைத்தொகை வழங்க வேண்டும் என்று கடற்கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதமே இந்த கடத்தல் சம்பவம் நடந்ததாக பல்கேரியாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடத்தப்பட்ட சரக்கு கப்பல் தற்பேது ஹோப்யோ நகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக