இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 6 பிப்ரவரி, 2010
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆளும் கட்சி அழைப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆளும் கட்சி அழைபப்பு விடுத்துள்ளது
ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்ததன் மூலம் மேற்கொண்ட தவறுகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் இருப்பதாக> சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா> தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அறிவித்துள்ளார்.
அவசர காலச் சட்ட நீடிப்பு தொடர்பில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உங்களது மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமாயின் எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும்> எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தல் முடிவுகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தால் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தங்களது சார்பில் சாட்சிக்காக ஆஜர்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போன்றே ரணில் விக்ரமசிங்கவும் ஒர் வெற்றியாளராக கருதப்பட வேண்டும் எனவும்> ஜெனரல் பொன்சேகாவின் தோல்வியின் மூலம் ரணிலின் அரசியல் பயணம் தொடர வழிகோலியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வெற்றி பெற வேண்டும் என்பதே ரணில் விக்ரமசிங்கவின் இரகசிய எதிர்பார்ப்பாக அமைந்ததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஒரு சில ஊடகங்கள் மட்டுமே பக்கச்சார்பின்றி செயற்பட்டதாக அவா தெரிவித்துள்ளார்.
போலியான பிரச்சாரங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அதன் மூலம் அரசியல் லாபமீட்ட எந்தவொரு எதிர்க்கட்சியும் முனைப்புக் காட்டக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக