சனி, 6 பிப்ரவரி, 2010

என் தலைவரை ஏன் கொன்றீர்...?

என்தலைவரை ஏன் கொன்றீர்கள் என்று உரக்க கத்த வேண்டும் என்ற உணர்வு, வானொலிகள், பத்திரிகைகள், ஏன் இணையங்கள் எல்லாமே என் தலைவனின் வீரச்சாவு பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றது. விடுதலைப்புலிகளின் சர்வதேச தொடர்பாளரான எஸ்.பத்மநாதன் என்பவர் கூட இதை உறுதிப்படுத்தி அறிக்கை விட்டார், போதாததிற்க்கு மட்டு, அம்பாறை அரசியல்த்துறையும் அறிக்கை விட்டது. அதனால் உயிரோடு இருக்கும் ஒரு தலைவனுக்கு அஞ்சலி செலுத்தும் கொடுமை மிக்க இனமாக்கப்பட்டோமா? தளத்திலிருந்து புலனாய்ப்பிரிவின் பொறுப்பாளர்களின் ஒருவர் தெரிவித்த கருத்துக்கள் இங்கு மழுங்கடிக்கப்பட்டு, முகம் தெரியாத மனிதர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டுள்ளது. இத்தனை வருட கால போராட்டத்திற்க்கு யாரெல்லாம் உழைத்தார்களோ, எவர் எல்லாம் களப்பணி ஆற்றினார்களோ அவர்களை எல்லாம் நாம் இழந்து கண்ணீரோடு நிற்க்கின்றோம். ஊடைந்து போன எம் உள்ளமைப்புக்களையும் வெளிக்கட்டமைப்புக்களையும் மீண்டும் நலிவடைய செய்யும் பாரிய சதியா? தலைவரின் வீரச்சாவு செய்தி என்பதை எமக்குள் நாம் கேட்க வேண்டிய தேவை எமக்கு உள்ளது. காற்றோடு கதை பேசி பல ஆயிரம் வீரரைப்படைத்தது எங்கள் மண்! நேற்றைக்கும் இன்றைக்கும் நாளைக்கும் தமிழை நிமிர்த்தி வைத்தவன் எங்கள் தலைவன். நம்பிக்கையற்றவர்கள் தங்கள் நம்பிக்கையீனங்களை வெறுப்புக்களால் அல்லது தலைவருக்கு அஞ்சலி செலுத்த விடுங்கள் என் தொனியில் வெளிப்படுத்த தவறவில்லை. மாற்றுக்கருத்தாளர்கள், மற்றும் பலர் இன்றும் இப்போதும் தலைவர் பற்றிய விமர்சனங்களை முன்வைத்தபடியே இருக்கும் போது நேற்று வரை போராட்டத்தை நேசித்தவர்களும், அதற்காய் தளத்திற்ககு வெளியே உழைத்தவர்களுக்கும் இந்த போராட்டம் கசத்தது என்பது தமிழினத்தின் துரதிஸ்டமே! களத்தில் நின்று அளப்பெரிய தியாங்களை செய்த போராளிகளுக்கும் அந்த போராளிகளுக்கு உதவியதால் கொல்லப்பட்ட மக்களுக்கும் சொல்ல வேண்டிய நாம் அழிக்க வேண்டிய பதிலை மறந்து அகதி முகாம் வாழ்க்கையையும், அவல வாழ்வு பற்றியும் பேசாமல் புலிகளை பற்றி விமர்சனங்களை மட்டும் முன்வைப்போர் உண்மையில் விடுதலைப் போரை நேசித்தவர்களா? அல்லது திண்னை எப்போது காலியாகும், உட்காரலாம் என்று பாத்திருந்தவர்களா? விடுதலைப்புலிகள் என்ற ஒரு சக்தி ஈழத்தில் அழிக்கபட்டது உண்மை எனில், அதன் தலைவன் எங்கள் தேசியத்தலைவர் வீரச்சாவை அணைத்தது உண்மை எனில் நாளைய தமிழினத்தின் எதிர்காலம் என்ன என்பதை இந்த அஞ்சலி செய்ய விருமப்பும் நபர்கள் அமைப்புக்கள் உறுதி செய்ய வேண்டுமல்லவா? அகதி முகாம்களில் வாழும் இளைஞர்களுக்கு இன்று அந்த வாழ்வு இனிக்கலாம் ஆனால் அதே நேரம் தன் முன்னே நடக்கும் அக்கிரமங்களுக்கு அந்த இளைஞனும் ஓர் நாள் பதில் சொல்லியே தீர்வான் என்றால் அவன் தேர்தெடுக்கப்போகும் வழி அரசியலோ, அகிம்சையோ அல்ல என்பதை எல்லோரும் மறந்து விடுகின்றனர். இன்று புலிகளைப்பற்றி பேசும் பலருக்கும் அதன் தேவை உணரப்படும் போது தங்கள் வாய்களை எங்கே வைத்துக்கொள்வார்கள் என்பது வேறு கேள்வி! புலத்தில் நடைபெற்ற பேராட்டங்களை நலிவுறச் செய்து அதல் பாரிய வெற்றியை கண்டுள்ளது சிங்கள அரசு. இது எதனால் என்று கேட்டால் முற்று முழுதாக தலைவரின் வீரச்சாவு செய்தியால் என்று என்னால் 100 வீதம் சொல்ல முடியும். தலைவர் இல்லாத விடுதலையை யாரால் எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என்பது பாரிய கேள்விக்குறியாக உள்ள போது இங்கு பலருக்கு வேறு விதமான நாட்டங்கள் அதிகரித்துள்ளன. அது தான் யார் அடுத்த தலமை! வெற்று பேச்சு மேடை ஏறி பேசுபவனோ! 33 வருடங்கள் தலைவரின் நண்பன் என்பதாலே தமிழரின் தலைமை ஏற்றுக்கொள்ளும் தகுதி யாருக்கும் இல்லை. புலிகளுக்கு அரசியல் அறிவு இல்லை என்று சொல்லும் தமிழகத்து ஊடகங்களோ, எம் புலம்பெயர் தமிழர்களோ, கண்டிப்பாக அரசியல் என்றால் என்ன என்பதை வெளிகாட்ட வேண்டும்! வார்த்தைகளை கோர்த்து வர்ண ஜாலங்கள் போடுவதால் உண்மைகள் ஒருபோது; அழியப் போவதில்லை. எம் தலைவனை கொன்றவன் யாராக இருந்தாலும் அவனை நான் மட்டுமல்ல என் சந்ததியும் மன்னிக்காது. உயிருள்ள மனிதனுக்கு அஞ்சலி செய்ய விளையும் ஊடக ஜாம்பவான்கள் ஒரு நிமிடம் தங்கள் சிந்தனையை மீட்டி யாதார்த்தத்தை உணருங்கள்...! உலகுக்கு எம் தலைவன் மானச்சாவடைந்தான் என்று ஒரக்க சொல்வதால் உங்கள் உள்ளங்கைகளில் ஈழத்தை கொண்டு வந்து தருவார்கள் என்று கனவு காணும் புலம் பெயர்வாழ் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளே உங்கள் அறிவு கெட்டத்தனமான அறிவுரைக்கு புலிகளின் சர்வதேச தொடர்பாளர் பலியானார் என்ற செய்தி கசக்கின்றது. எம் சமூகத்தை வழி நடாத்த முடியாத உங்களால் எப்படி இப்படியான ஆலோசனைகளை வழங்க முடிந்தது என்பதை பற்றி சிந்தியுங்கள். தமிழர்கள் பற்றிய முடிவை எடுக்க வேண்டிய தலமையை இல்லை என்று சொல்லி விட்டு யாரின் கழுத்தில் மாலையிட இந்த ஆலோசனைகள்???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக