இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 6 பிப்ரவரி, 2010
ஆயுததாரி இனியபாரதி சிறார் போராளிகளை இணைப்பதாக ஐ.நா குற்றம் சுமத்தியுள்ளது
சிறீலங்காத் துணை இராணுவக் குழுவின் ஆயுததாரியான இனிய பாரதி சிறுவர் போராளிகளை இணைப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்னர் சிட்டி பிரஸ் நியூஸ் இணையத்தை மேற்கோள்காட்டி டெய்லிமிரர் எனும் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறுவர் மற்றும் ஆயுத போராட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மேஜர் ஜெனரல் பெற்றிக் கெமார்ட் தனது இலங்கைப் பயணம் குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறீலங்கா அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் என்றழைக்கப்படும் கருணாவின் ஆதரவாளரான இனிய பாரதி என்பவரே அகவை குறைந்தவர்களை போராளிகளை இணைப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அப்பாறைப் பிரதேசத்தில் இவ்வாறு சிறுவர்கள் இணைக்கப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக