சனி, 6 பிப்ரவரி, 2010

டொயொட்டோ நிறுவனம் மிகப்பெரும் சிக்கலில்

மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான டொயொட்டோ, தமது வாகனங்களின் வேகத்தை அதிகரிக்க உதவும் ஆக்ஸிலரேட்டர் பெடல்களில் பிரச்சினைகள் இருந்ததால் எண்பது லட்சம் வாகனங்களை மீள்ப்பெற எடுத்த முடிவுக்கு பிறகு, அதற்கு மேலும் ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பெட்ரோல் மற்று இயற்கை வாயு ஆகியவற்றின் கலப்பில் ஓடும் டொயொட்டோவின் புதிய அறிமுகமாக பிரியஸ் எனும் மாடல் கார்களின் பிரேக்குகளில் பிரச்சினை இருப்பதாக அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. அந்த வகையான காரின் பிரேக் செயற்பாட்டின் வடிவமைப்பை தாங்கள் மாற்றியமைத்துள்ளதாகக் கூறும் டொயொட்டோ, ஏற்கனவே சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களை எப்படி சரி செய்வது என்பது தொடர்பிலான நடவடிக்கைகளும் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. எனினும் இந்த சிக்கல் பாதுகாப்பு தொடர்பான அபாயம் ஏதும் கிடையாது என்றும் அதை சுலபமாக சரி செய்துவிடலாம் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது. ஏற்கனவே ஓடிக் கொண்டிரும் தமது வாகனங்களை திரும்பப் பெற நேர்ந்தது அந்த நிறுவனத்துக்கு இரண்டு பில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக