சனி, 6 பிப்ரவரி, 2010

சோகம் தொலைத்து உறுதி கொள்வோம்!

கூண்டோடு எங்கள் மக்கள் அழிக்கப்ப்பட்டனம். குற்றுயிராய் கிடந்த எம் மக்கள் கொலை செய்யப்பட்டனர். புல் டோசர்களால் எங்கள் மக்கள் பிணங்கள் புதைக்கப்பட்டது. புகை கக்கிய முள்ளிவாய்காலின் இறுதி நாள் நிகழ்வுகள் நெஞ்சை பிழிந்து இரத்தத்தை உறைய வைத்தன. விடுதலை என்பது சும்மா சுண்டங்காய் அல்ல தலைவன் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை அத்தனை வலிகளையும் சுமந்த மக்களும் புரிந்திருந்தனர். நீண்ட நெடு நிரை நின்று வவுனியாவுக்கு பயணிக்கும் பாதி வழியில் தண்ணீரின்றி, உண்ண உணவின்ற மடிந்து போயினர் எங்கள் உறவுகள். மனிதம் மரணித்ததை முதல் முதலாய் கண்டென் என்று கண்ணீர் சிந்திம் விழியோடு சொல்லுகின்றார் ஒரு முதியவர். வாழ்வு எறிகணைக்குள்ளும் குருதி பாயும் ஆறுகளுக்குள் மிதந்த போதும் முள்ளி வாய்க்கால் வரை மனிதநேயம் மண்டியிடாது இருந்தது. மரத்தடி வாழ்வு எனினும் மற்றும் படி எத்த சட்டமும் எந்த முள்வேலி வளையங்களும் எம்மை தடுததில்லை. கேள்வி கேட்க தயங்கி நின்று, சில ஒட்டுண்ணிகளின் ஆதரவுக்காய் காத்திருக்கும் போது தான் எத்தனை பேச்சுங்கள், எத்தனை சாபங்கள் தாங்கிய படியும் மீண்டும் ஐயா, அம்மா, என்று தங்கள் முகம்களை பார்க்கும் புலிகளின் நினைவு நெஞ்சுக்கு வருகிறாதாய் சொல்கிறார் அந்த முதியவர். முள்ளிவாய்காலில் தங்களிடம் தஞ்சமென வந்தவர்களுக்கு வாழ்வளிக்க இலட்சியத்தை பெற இருந்த ஆயதத்தை கிழே போட்டு நஞ்சுண்ண முடிவெடுத்த அந்த போராளிகளின் தியாகம் எங்கே? அரைப்பாசல் சாப்பாட்டுக்கு மக்களை முண்டியடிக்க வைத்து கொலை செய்யும் இந்த துரோகிகள் எங்கே? விடுதலை பெற்ற இலங்கை குடிமக்கள் யார் என்பதை உலகுக்கு சிங்களவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது அடிமைப்படுத்தப்பட்ட தமிழினத்தின் குடும்பத்தின் குருத்துக்களின் கற்பு அரச படைகளிடமும், கூலிக்குழுக்களிடமும் பறிபோய் கொண்டிருந்தது. சாபம் பெற்ற இனம் ஒன்றின் இன்னல்களை கண்டுகொள்ள யார் உள்ளனர்? ஓமந்தையில் இருந்து ஒட்டுசுட்டான் வரை நிரையாக நிற்க்கும் எம் மக்களின் உணர்வுகள் பேசும் கதைதான் என்ன? கொள்ளிகட்டை கூட போட முடியாது வீதி வழிவிட்டு வந்த உறவுகளின் மரணங்கள் அவர்கள் உறவுகள் மனதில் ஆறாத வடுவைவிட்டுச் சென்றது. உயிர் உள்ளவரை உற்றவரை உறவினரை வாட்டும் இந்த சோகம் என்று தீருமோ,? தீரத்தான் வேண்டும் உறவுகளே! எம் கூடுகலைத்து கும்மிருட்டில் எம் இனத்தை தள்ளியவன் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். சிங்கள தேசமும் அதன் அரசும் இதற்க்கு கண்டிப்பாக தமிழினத்தின் வரலாற்றில் குருதியால் பதில் எழுதியே தீருவார்கள்! 30000 மக்களின் ஆன்மாக்களின் மீது உறுதி எடுத்துக்கொள்வோம்... 30000க்கு மேற்ப்பட்ட மாவீரரின் துணையோடு தொலையாக கனவொன்றை வென்றெடுக்க நம் சோகம் கலைவோம். சுக்குநூறாக சிங்களம் வெடிக்கும் வரை வெற்றிக்காய் உழைப்போம் எழுந்திருங்கள்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக