சனி, 6 பிப்ரவரி, 2010

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்களை இடம்மாற்றும் நடவடிக்கை சிறீலங்கா

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்களை இடம்மாற்றும் நடவடிக்கையில் சிறீலங்கா ஈடுபட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தமிழ் குழந்தைகளும் பெற்றோர்களும் உரிய அடிப்படை வசதிகள் அற்று சிறிலங்காவின் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களை களுத்துறைச் சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தென்னிலங்கையில் முழுமையான சிங்கள மக்களை கொண்ட களுத்துறைப் பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் வடபகுதிச் சிறைகளில் உள்ளவர்களை புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறைக்கு மாற்றும் செயற்பாடுகளில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிறையில் உள்ள குழந்தைகளையும் தாய்மார்களையும் உறவினர்கள் பார்வையிட முடியாத அளவிற்கு சிங்கள அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக