சனி, 6 பிப்ரவரி, 2010

கருணா மற்றும் பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் நிலை உக்கிரம்

தேச நிர்மான அமைச்சர் விநாகமூர்த்தி முரளீதரன் என்றழைக்கப்படும் கருணாவிற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் நிலை உக்கிரமடைந்துள்ளதாக லக்பிம பிரதான செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது இந்த நிலைமை மேலும் உக்கிரமடையக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் இரகசியமாக எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ளதாக கருணா தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். இம்முறை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டியிடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்றைய தினம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விசேட கூட்டமொன்றை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக