
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 6 பிப்ரவரி, 2010
கருணா பிளவில் பங்கு வகித்த அலிசாகிர் மௌலானா மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார்
ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டு கருணாவின் பிளவில் முக்கிய பங்கு வகித்த அலி சாகிர் மௌலானா இம்முறை மகிந்த றாஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருணாவைக் காப்பாற்றி கொழும்புக்குக் கொண்டு வந்தவர் இவர் என அம்பலமானதும் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினமாச் செய்து விட்டு வெளிநாடுகளில் அஞ்ஞாதவாசம் செய்த இவர் ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் நாடு திரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பொருத்தமான தமிழ் வேட்பாளர்களைக் களமிறக்க முடியாத வங்குரோத்து நிலையில் உள்ள அரசாங்கம் தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் சிலருக்கு வலை வீசி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக