இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 6 பிப்ரவரி, 2010
இன்டர்நெட்டுக்கு நோபல் பரிசு?
இன்டர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என இத்தாலிய இதழ் மற்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இத்தாலியிலின் புகழ்பெற்ற இதழ் வயர்டு இத்தாலி. உலக நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்துவதில் இன்டர்நெட் முக்கிய பங்கு வகிப்பதாக அது தெரிவித்துள்ளது. மகத்தான சேவையைப் பாராட்டி, இன்டர்நெட்டுக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
இதற்காக, இன்டர்நெட் பார் பீஸ் என்ற தலைப்பில் ஒரு பிரசாரத்தைத் தொடங்கி உள்ளது. இதன்படி, உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்கு இன்டர்நெட் ஆற்றி வரும் பங்கு குறித்து பல்வேறு தகவல்கள் எடுத்துரைக்கப்படும். இந்த பிரசாரம் வரும் செப்டம்பர் வரை தொடரும். இதுகுறித்த தங்களது கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இன்டர்நெட் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களை மத, இன வேறுபாடு இல்லாமல் ஒருங்கிணைக்கிறது என வயர்டு இத்தாலி பத்திரிகை ஆசிரியர் லுனா தெரிவித்துள்ளார்.
இதுதவிர, 2003ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபடி மற்றும் புற்றுநோய் சிகிச்சை நிபுணரான உம்பெர்டோ வெரோனெசி ஆகியோரும், இன்டர்நெட்டுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக