சனி, 6 பிப்ரவரி, 2010

கசூரினாக் கடற்கரையில் கலாசாரச் சீரழிவு

காரைநகர் கசூரினாக் கடற்கரைக்குச் செல்லும் சிலர் கலாசாரச் சீரழிவில் ஈடுபட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஏ-9 பாதை திறக்கப்பட்ட பின்னர் தென்பகுதியிலிருந்து பெருமளவான பொதுமக்கள் (உல்லாசப் பயணிகளாக) குடாநாட்டுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வருகை தரும் உல்லாசப் பயணிகள் காரைநகர் கசூரினாக் கடற்கரைக்கும் பெருமளவில் படையெடுத்து வருகின்றனர். இதேநேரம் யாழ்.குடாநாட்டுப் பொதுமக்களும் இவர்களுட ன் வருகை தரும் அதேவேளை சில இளைஞர், யுவதிகள் கலாசார சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கூடுதலாகத் தனியார் கல்வி நிலையத்திற்குச் செல்வோர் அங்கு செல்வதாகக் கூறிவிட்டு கசூரினாக் கடற்கரைக்கு வருகின்றனர். இவ்வாறு இந்த வாரம் தனியார் கல்வி நிலையத்திற்கு என வீட்டில் கூறிவிட்டு வந்த பருத்தித்துறையைச் சேர்ந்த 22 வயது யுவதி ஒருவரும் கோண்டாவிலைச் சேர்ந்த இரு இளைஞர்களும் சந்தேகத்திற்கிடமாக உலாவியதை அடுத்து அப்பகுதி கிராம அலுவலருக்குத் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து குறித்த கிராம அலுவலரினால் அவர்கள் விசாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். இவ்வாறான பல சம்பவங்கள் நிகழ்வதனால் பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளிலும் உல்லாசப் பயணங்களிலும் விழிப்பாக இருக்க வேண்டும் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும், சிறீலங்காவின் புலனாய்வுப்பிரிவினால் கலாச்சார சீரழிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக