சனி, 6 பிப்ரவரி, 2010

ஆரம்பிக்கிறது ஆடம்பர கழியாட்டங்கள்

நாங்கள் இத்தனை நாளாய் நடித்துக்கொண்டிருந்தோம்.எங்களுக்கு எமது மக்கள் பற்றி அக்கறை, தேவை அவர்களுக்காக நாங்கள் போராட்டம் செய்கின்றோம். எங்கள் விருப்பங்களை அவர்களுக்காக விட்டு விடுகின்றோம். என்று எத்தனையோ கதைகளை நாம் சொல்லிவிட்டோம். ஆனால் அவை அனைத்தும் முள்ளிவாய்க்கால் கடந்து வவுனியாவில் மக்கள் அடைபடும் வரை தான். அப்படியானால் இத்தனை நாட்கள் நாங்கள் எதற்காகநடித்தோம்? யாரினதும் வற்ப்புறுத்தலுக்காகவா,? இல்லையேல் மற்றவர்களுக்காகவா? தமிழர்கள் மத்தியில் உண்மையான உணர்வு இருந்திருக்குமானால் இந்த கலியாட்டங்கள் நடைபெறுமா? ஊடகங்கள், அமைப்புக்கள் எல்லாமே தமிழ் மக்கள் மீது எத்துணை பற்று வைத்திருக்கின்றன என்பதை மிக குறுகிய காலத்தில் தமிழ் மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர். அமைப்புகளுக்குள்ளும்,, ஊடகங்களுக்குள் தனிமனிதர்கள் முடிவுகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதன் காரணமாக மற்றையவர்களின் கருத்து என்பது மிகவும் குறைவாகவே இங்கு உள்வாங்கப்படுகின்றது. நேற்று நாம் எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி வைத்து விட்டு நாளைகக்கு கலியாட்டம் செய்வது நல்லதல்ல. மக்கள் ஒன்று கூடல்கள், கவலைகள் பகிர்ந்து கொள்ள உதவும். ஆனாலும் அந்த ஒன்று கூடல்கள் எப்படி அமைய வேண்டும் என்பதில் ஏற்ப்பபாட்டடாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். நாங்கள் எமது உறவுகளின் சோகத்தை பகிர்ந்து கொள்ளுமுகமாக ஒன்றுகூடல்களை ஏற்பாடு செய்தன் ஊடகா நாம் இழந்த உறவுகளை, உறவுகளை இழந்த மற்றையோரின் துயரினை பகிர்ந்து கொள்ள ஒன்று கூடல்கள் இடம் கொடுக்க வேண்டும். மக்களின் மனதை பாதிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றி ஏற்பாடாளர்கள் சிந்திக்க வேண்டும். வெறும் பணம் சேர்ப்பதை மட்டும் குறிக்கோளாக கொள்ளாது மக்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஊடகங்கள், மற்றும் அமைப்புகள் தமது நிகழ்வுகள் பற்றிய விளக்கத்தில் மக்களினன் மன அழுத்ததை போக்க வேண்டும் என்று கூறும் கருத்து சரியானது ஏனினும் மக்களின் மன அழுத்தத்தை கூட்டும் வகையில் இவர்களின் செயற்ப்பாடுகள் அமையப்பெற்றுள்ளமை வருந்தத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக