சனி, 6 பிப்ரவரி, 2010

சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுசென்ற விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் ‐ ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர் தொடர்ந்து தடுத்துவைப்பு‐

இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுசென்ற விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமனாப் படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான எம்.ஐ.24 ரக தாக்குதல் உலங்குவானூர்த்தியை அழித்த விடுதலைப் புலி உறுப்பினர் ஆகிய இருவரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் சம்பா ஜானகீ ராஜரட்னம் நேற்று காவல்துறையினருக்கு அனுமதியளித்துள்ளார். சீனாவிடமிருந்து மிகவும் இரகசியமாக பெற்றுக்கொள்ளப்பட்ட ஆயுதங்களும் தோட்டாக்களும் கொரிய பிரஜைகளின் உதவியுடன் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 கப்பல்களில் பகுதி பகுதியாக இலங்கைக்கு கொண்டுசென்றுள்ளதாகவும் வானூர்த்தியைத் தாக்கியழிக்கக் கூடிய சேம் ஏவுகணை கூடு விடுதலைப் புலிகளின் முகாமொன்றிலிருந்து மீட்கப்பட்டு தற்போது ரத்மலான விமானப்படைகளின் முகாமில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனார். விடுதலைப் புலிகளுக்கு கப்பல் மூலம் ஆயுதங்களைக் கொண்டுவதாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் தொண்டமனாறு எம்.ராஜேந்திரன் கருணாகரன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு வானூர்த்தியை அழித்ததாகக் கூறப்படும் அருளானந்தன் நிஷாந்தன் ஆகிய இரண்டு விடுதலை விடுதலைப் புலி உறுபு;பினர்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கொள்வனவு குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் அறிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆயுதக் கொள்வனவின் பின்னர் அவற்றை விநியோகிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய விடுதலைப் புலிகளைக் கண்டறிய வேண்டியுள்ளதால் சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் அனுமதிகோரினர். அத்துடன்> எம்.ஐ. 24 ரக உலங்குவானூர்த்தியை ஏவுகணை மூலம் தாக்கியழித்த சம்பவம் குறித்த விசாரணைத் தகவல்களை நீதிமன்றத்திற்கு அறிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர்> 2000ம் ஆண்டு செப்டம்பர் 23ம் திகதி திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட சேம்‐3 ரக ஏவுணைகளைத் தாக்குதலினால் வானூர்த்தி உப்பாறு களப்பில் வீழ்ந்ததாகத் தகவலளித்தனர். அருளாந்தன் நிஷாந்தன் என்ற சந்தேக நபர் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டுள்ளதாகவும் இறுதிக் காலம் வரை அவர் இயக்க செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஏவுகணையின் கூட்டில் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட திகதி> நேரம்> மேற்கொண்டவரின் பெயர் விபரங்களை தமிழ்மொழியில் கூட்டில் பதித்து களஞ்சியப்படுத்துவது வழக்கம் எனவும்> விடுதலைப் புலிகளுக்கெதிரான இறுதி யுத்தத்தின் போது இவ்வாறான பல ஏவுகணைக் கூடுகள் மீட்கப்பட்டதாகவும் தகலளித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீட்கப்பட்ட ஏவுகணைக் கூடுகளில் எம்.ஐ. 24 ரக வானூர்த்தியை அழிப்பதற்குப் பயன்படுத்தி ஏவுகணைக் கூடும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் குறித்து மேலும் பல தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுமென குற்றப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றத்தில் இதன்போது அனுமதி கோரினர். பின்னர் வேண்டுகோளுக்கு அனுமதியளித்த நீதவான் எதிர்வரும் 26ம் திகதி விசாரணைகளின் நிலைமை குறித்து மீண்டும் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக