சனி, 6 பிப்ரவரி, 2010

யாழ்ப்பாணத்தில் எச்எஸ்பிசி (HSBC) வங்கியின் கிளை

எச்எஸ்பிசி (HSBC) வங்கியின் கிளையொன்று அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து வடக்கில் பெருமளவு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர் மேலும் கூறியுள்ளார். கடந்த வருடம் மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கில் இலங்கை வங்கிகள் புதிய கிளைகளை அமைக்க ஆரம்பித்தன. வடக்கில் 73 புதிய வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கு இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்திருந்தது. இதனடிப்படையில் இலங்கை வங்கிகளே இதுவரை தமது கிளைகளை வடக்கில் திறந்து வந்தன. அடுத்த வாரம் முதலாவது வெளிநாட்டு வங்கியான எச்எஸ்பிசி வங்கி தனது கிளையை திறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக