இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 6 பிப்ரவரி, 2010
அவுஸ்திரேலியா கடற்பரப்பில் 45 ஈழத்தமிழருடன் மற்றுமொரு படகு மீட்பு
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அண்மையில் 45 ஈழத்தமிழ் மக்களுடன் கடலில் தத்தளித்த படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் அகதிகளுக்கான இணைந்த நவடவடிக்கை குழு இன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது,கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அண்மையாக 45 ஈழத்தமிழ் மக்களுடன் தத்தளித்த படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான படகில் இருந்து இன்று மாலை (6) பெறப்பட்ட உதவி அழைப்புக்களை தொடர்ந்து எல்லைக்காவல் படையினர் அகதிகளுக்கான செயற்பாட்டாளர்களை எச்சரித்திருந்தனர்.
படகில் இருந்தவர்கள் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் அகதிகளுக்கான இணைந்த நவடவடிக்கை குழுவின் பேச்சாளர் இயன் றின்ரவுல் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் இருந்து ஜனவரி 20 ஆம் நாள் புறப்பட்ட அவர்களின் படகின் எரிபொருள் தீர்ந்துபோனதால் கடலில் படகு நின்றுவிட்டதாக படகில் வந்தவர்கள் தெரிவித்தததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்கள் அவர்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி இருந்ததால் பலர் நோய்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், சோர்வடைந்தும் காணப்படுகின்றனர். இருவர் அம்மை நோயயால் பதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக