சனி, 6 பிப்ரவரி, 2010

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடைக்கோட்டா சலுகை ரத்து

இலங்கைக்கான ஆடை ஏற்றுமதி கோட்டா சலுகையை ரத்துச்செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் உத்தியோகபூர்வ முன்னெடுப்புகள், இந்த மாத இறுதியில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தடை 6 மாதத்திற்கு பின்னரே அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் இந்த தீhமானத்தை எடுத்துள்ளனர். விசாரணை அறிக்கைகளின்படி ஜி எஸ் பி பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்வதற்கான ஒழுங்குகளை இலங்கை நிறைவேற்றவில்லை என தெரியவந்துள்ளதாக ராஜதந்திர தரப்புகள் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடை கோட்டா சலுகை வறிய நிலையில் உள்ள 16 நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இலங்கைக்கான ஜி எஸ் பி பிளஸ் ரத்து தீர்மானம் கடந்த வாரம் எடுக்கப்பட்டது. இந்தநிலையில் அது எதிர்வரும் 16 ஆம் திகதி பிரசல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியமைச்சர்கள் கூடும் போது உறுதிப்படுத்தப்படவுள்ளது. அதேநேரம் இந்த முடிவை திரும்பப்பெறுவதற்கு கொழும்புக்கு வாய்ப்பு ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக ராஜதந்திர தரப்புகள் குறிப்பிட்டுள்ளன. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் உரியவகையில் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த தடை அமுலுக்கு வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக