ஞாயிறு, 2 அக்டோபர், 2011

என்றும் எங்கள் மனங்களில் வாழும் உங்களை மறக்கும் நாள் எங்களது உயிர் போகும் நாள்........

ஒரு விடுதலை வீரனின் சாவு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திரநிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெரும் அற்புதமான நிகழ்வு உண்மையில்
ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு
என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச்
சக்தியாக மற்றவர்களை பற்றிக்கொள்கிறது ஒரு இனத்தின் தேசிய ஆண்மாவைத்
தட்டியெழுப்பிவிடுகிறது.

வெள்ளி, 22 ஜூலை, 2011

கறுப்பு ஜூலை கொடூரத்தின் 27 ஆவது நினைவு நாள் அதே 23 இல் இன்று தமிழரின் தலைவிதி நிர்ணயம்.

1983 ஜூலை 23 இலங்கை வரலாற்றில் கறுப்புதினம்.இரத்தக்கறை படிந்த நாள் . பேரினவாதிகள் மிருகங்களாக மாறி தமிழர்களை வேட்டையாடிய கொடுமை மிகு நாள். ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலையுண்ட 27 ஆவது நிறைவு நாள். இன்றும் ஜூலை 23. தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் நாள்.

27 ஆண்டுகளுக்கு முன் 1983 ஜூலை 23 ஆம் திகதி முதல் சுமார் ஒருவார காலம் நாடு முழுவதும், குறிப்பாக தலைநகரில் தமிழர்கள் உயிருடன் எரியூட்டப்பட்ட, கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட, வீடுகள், வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்ட, எரியூட்டப்பட்ட கொடூரமிக்கக் காட்சிகள் கண்முன் விரிகின்றன. அந்த சில நாள்களில் 3ஆயிரம் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள். 25ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கவீனம் அல்லது காயங்களுக்கு இலக்காகினர். ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் வீடுகள், வர்த்தக நிலையங்களை இழந்து நிர்க்கதியாகினர். இந்த அக்கிரமம், அராஜகம், காடைத்தனங்களைப் புரிந்த பேரினவாதிகள் குதூகலித்து ஆரவாரித்து கொண்டாடியதை எப்படி மறப்பது?துயரம் மிகுந்த அந்த நினைவு நாளில் இன்று தமிழன் தன் தலைவிதியை நிர்ணயிக்கத் தயாராகிவிட்டான். தமிழ் மக்களின் ஏகோபித்த முடிவை சர்வதேசம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. தமிழரின் விடிவு அவர்களின் கைகளில் தான்!

வியாழன், 21 ஜூலை, 2011

இந்த மண்ணுக்காகப் போராடியவர்கள் நல்ல சிந்தனை, நல்ல பண்பாடு உள்ளவர்கள். எப்படியடா இவர்களைப் பற்றிக் குறை சொல்ல முடியும்.

தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு கிளிநொச்சியில் இருக்கும் எனது முன்னாள் நண்பன் வீரா வீட்டுக்குப் போக வேண்டும் என நினைத்து அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கிளிநொச்சிக்குச் சென்றேன். எப்படி இருப்பானோ என்ன செய்கின்றானோ என்று தெரியாது. அவனது வீட்டு வாசலில் போய் நின்றேன். நாலு, ஐந்து பனை மட்டை களால் கட்டப்பட்ட படலையினூடாக கொட்டில் வீட்டைப் பார்த்தேன். யாரையும் காணவில்லை.
யாழ்ப்பாணத்தில் இருந்து இவ்வளவு தூரம் வந்தது எப்படியாவது அவனைப் பார்த்து விட வேண்டும் என நினைத்து எனது மோட்டார் சைக்கிள் கோனை அடித்தேன். உள்ளே இருந்து ஓர் அம்மா வந்து யார் தம்பி என்றார். அவனது சொந்தப் பெயரை மறந்ததால் அவனது புனைப் பெயரைக் கூறி வீரா இல்லையா என்றேன். நான் அந்தப் பெயரைச் சொல்லிக் கேட்டதால் அந்த அம்மா எந்தவித தயக்கமும் இன்றி அப்படி ஒருவர் இல்லை என்று கன்னத்தில் அறைந்த மாதிரி பதிலைச் சொல்லி விட்டு கொட்டிலுக்குள் சென்றுவிட்டா.
 

திங்கள், 11 ஜூலை, 2011

எங்கட தலைவற்ர இலட்சியமும், மாவீரரின்ர கனவும், மக்களின்ர அர்ப்பணிப்பும் வீணாகிப் போக..................!!!!?

உவங்கள் எங்கட தமிழ்ச் சனத்தை என்னடா கேக்கிறாங்கள்…?’ என்றபடியே கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார் முகத்தார்.


‘காலங்காத்தால கடகத்திலை ஏத்திக்கொண்டு வந்திட்டியளோ…?’ என்று வழக்கமான நக்கலுடன் முகத்தாரை வரவேற்றார் அப்புக்குட்டியர்.

புதன், 29 ஜூன், 2011

தமிழர் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இராணுவப் புலனாய்வாளர்கள்???

வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ ஆட்சி தொடங்கி பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது. சுதந்திரமாக இயங்கிய வன்னி வீழ்ச்சி அடைந்து இரு வருடங்களுக்கு மேலாகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் தாயகம் முழுவதும் இன்று அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டதை உணர முடியும்.

செவ்வாய், 21 ஜூன், 2011

இன்று தலைவனின் அமைதியான நிலைக்கு நாமே பொறுப்பு, இந்த நிலையை நீக்குவதும் நமது பொறுப்பே............................

சேனல்4 வெளியிட்ட காணொளியில் புலிகளை மிக கொடுமையான போராட்ட குழு, கொடூரவாதிகள் என்று தெரிவிக்கிறார்கள். ஒரே சாட்சியமாக முகாம்களுக்கு நுழையும் முன் ஒரு வெடிகுண்டு வெடித்து நிறைய சிங்கள ராணுவமும், சில பொதுமக்களும் இறக்க நேரிட்டது. இதை புலிகள் தான் செய்தார்கள் என்று இராணுவம் கூறுகிறது. மக்கள் கூறவில்லை புலிகளும் மக்களை கொன்றார்கள் என நிரூபிக்க ஏதும் ஆதாரங்கள் எவரிடமும் உண்டா?

ஞாயிறு, 5 ஜூன், 2011

அண்ணன் இன்னும் சாகவில்லை….!

அன்புத்தங்கையே இசைப்பிரியாவே..
உன் உரிந்தமேனியைக் காட்டி
உழுத்துப் போன உலகம்
போர்க்குற்றம் பேச வந்திருக்கிறது..
கோபப்படாதே என்
குலக்கொழுந்தே கொஞ்சம் கேள்..!
என் இரத்தத்தின் இரத்தமே..
என் தமிழ் உதிரக்கொடியில்
ஒட்டிப் பிறந்த ஒரேயொரு உறவே..!

சனி, 4 ஜூன், 2011

எமது இனம் எழுந்துநின்று போர்க்கோலம் கொண்ட காலத்தின் அடையாளங்கள் அவர்கள்,,,

நிழற்படங்களை பார்த்தபோது மனது நொருங்கிப்போவது உண்மைதான். அந்த சதுப்பு நிலத்தின் ஆழம்குறைந்த நீருக்குள்ளாக எமக்காக போராடிய வீரர்களின் உயிரற்ற உடல்களின் கால்களை பிடித்து சிங்கள இராணுவத்தினர் இழுத்து வரும் காட்சியை நிழற்படத்தில் காணும்போது இதயம் சுக்குநுறாக வெடிப்பது போலவே இருக்கிறது.

புதன், 1 ஜூன், 2011

தமிழினப்படுகொலை - ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் விவாதம் !!!!!!!

ஈழத் தமிழினப் படுகொலைகளைக் கண்டித்து பல புலம்பெயர் நாடுகளில் வாழும் பெரும் எண்ணிக்கையான தமிழ் உணர்வாளர்கள் இன்று பெல்ஜியம் நாட்டின் புறுசெல் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் உணர்வுபூர்வமாக ஒன்றுகூடியுள்ளனர்.

சனி, 21 மே, 2011

வரலாறு காலத்திற்கு காலம் எமக்கு வாய்ப்புக்களை உருவாக்கித் தரும். அதனை நாம் ஒழுங்காக பயன்படுத்தாவிட்டால் வரலாறு ஒருபோதும் எம்மை மன்னிக்காது......

ஐ.நா போர்க்காலத்தில் அந்நிறுவனத்திற்குரிய விழுமியங்களுடன் செயற்படவில்லை. ஐ.நா நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்க முடியும். தமிழ் மக்களினுடைய அரசியல் இருப்பையும் பாதுகாத்திருக்க முடியும். ஐ.நா செயலாளர் தனக்குள்ள அதிகாரத்தை இதற்காக பயன்படுத்தியிருக்க முடியும்.
போருடன் மக்களின் உயிர் அழிவு,

இன அழிப்பின் இரண்டாம் ஆண்டு நினைவு

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் இரண்டாம் ஆண்டு நினைவும், ஆத்ம சாந்தி பூஜையும் 20.05.2011 அன்று Leicester முருகன் கோவிலில் மிகவும் அமைதியாகவும், உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது. நிறைவில் நாடுகடந்த தமிழீழ அரசின் வெளிவிவகாரங்களுக்கான அமைச்சர் திரு.தயாபரன் ( ஜனகன் மாஸ்டர் ) அவர்கள் தேசத்தின் பாலம் ஈழ மண்ணில் ஆற்றும் பணிகள் பற்றி விளக்கமளித்தார். அதனை தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் வரை நின்று களமாடிய போராளி ஒருவர், அங்கு மக்கள் பட்ட துயரங்களை அங்கு வந்திருந்த மக்களுடன் பகிர்ந்து கொண்டார். இறுதியாக அன்னதானம் வழங்கப்பட்டது.


இப் பூசையினை தேசத்தின் பாலம் அமைப்பினரும், முன்னாள் போராளிகளும் சேர்ந்து நடத்தி வைத்தனர்.

வியாழன், 28 ஏப்ரல், 2011

ஐ.நாவின் 196 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை என்ன?

ஐரோப்பிய செய்தியாளர்ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழு தனது அறிக்கையை கடந்த 12 ஆம் நாள் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளித்துள்ள நிலையில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள்

வெள்ளி, 18 மார்ச், 2011

லெப் கேணல் வானதி /கிருபா (நித்தியகரன் - மாலதி) 02 ம் ஆண்டு நினைவலைகள்( 21 / 03/ 2011)

விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் ,,மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம் ,,ஆனாலும் மறைமுக கரும்புலிகள் ,,,போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும்,,,தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது
தாயக களங்களில் சமர்களிலெல்லாம் போராளிகளின் தன்னலமற்ற செயற்பாடுகளே வெற்றிகளை எமதாக்கியது ..குடும்ப வாழ்வில் இணைந்த பெண்  போராளிகளாயினும் போராட்ட வாழ்வின் முன்னுதாரணங்களாக மேஜர் நிர்மலா ,,லெப் கேணல் கமலி ,,மேஜர் சுடரேந்தி ,,லெப் கேணல் வரதா ,,கேணல் தமிழ் செல்வி,, லெப் கேணல் இசைப்பிரியா ஆகியோரின் வரிசையில் லெப் கேணல்  வானதி /கிருபா ம் இணைந்து கொண்டாள். ஆம் குடும்ப சுமைகளை தாங்கும் குடும்பத்தலைவிகளாகவும் ,,,தாயக சுமைகளை தாங்கும் வீராங்கனைகளாகவும் போராடும் வாழ்வின் ஆதாரங்களாக மனதின் துணிவு எங்கிருந்துதான் கிடைக்க பெற்றது இவர்களிடம்.....!!!!!!!!

திங்கள், 21 பிப்ரவரி, 2011

எங்கள் ஈழத்தாயே சென்று வா…..!

உலகே உனக்கு கண்ணில்லையா?
எங்கள் தமிழிழ மண் என்ன மண்ணில்லையா?
பண்டார வன்னியன் மண்ணிலே!
படுத்துறங்கும் எங்கள் தலைவனின் கருவரைக்கு
இன்று இறுதி ஊர்வலம்

உலகாண்ட பரம்பரையின் அன்னை
எம் மண்ணில் உயிர் பிரிந்தால் -ஆனால்
உறவுகள் கூடி அழுவதற்கே உரிமையில்லை
அனாதைகலானோமே என்று அழுகுதம்மா
உந்தன் தமிழ் குடி

ஆறுதல் சொல்வதற்கோ யாருமில்லை
குடும்பமே அழிந்ததென்று கொக்கரிக்கும்
குள்ளநரிக் கூட்டங்களும் உலாவுதம்மா
எட்டி நின்று ஏங்குதங்கே
உந்தன் கொள்ளிக் குடம்
அதை எடுத்துவர முடியவில்லை என்று
ஈனத் தமிழினத்தின் விடுதலைக்கு
உன் வீர இளையமகன் கொடுத்த விலை
யாரரிவார் தாயாரே


வானவரும் மண்ணவரும் சூழ்ந்து நின்று
புனிதரும் மனிதரும் பூக்கள் தூப
உலக நாட்டு தலைவரேல்லாம்
இரங்கள் பா கூறி
சந்தனப் பேளையிலே தலைவனும் தளபதிகளும்
சுமந்து செல்வதாய் நினைத்து உன்னை
வழியனுப்பி வைக்கின்றோம் தாயே
பாலைவனமோ வான் கடலோ
பாருலகில் எங்கேயோ
எங்கள் தலைவனின் பார்வை படும் என்று நம்பி
வழியனுப்பி வைக்கின்றோம் தாயே…….

புதன், 2 பிப்ரவரி, 2011

குடாநாட்டு மக்கள் பயப்பீதியுடன் வாழ்கின்றனர்

யாழ்.குடாநாட்டு மக்கள் பயப்பீதியுடன் துன்பகரமான அச்ச உணர்வுகளுடனே இருக்கிறார்கள் என யாழ். மாவட்ட கத்தோலிக்க ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை பிரித்தானிய தூதரக அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். யாழ்.ஆயர் இல்லத்தில்  நடைபெற்ற விசேட சந்திப்பில் பிரித்தானிய மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகள் குழுவினருக்கும்; சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவினருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது யாழ். ஆயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விடுதலை செய்யப்படுவர்

63ஆவது சுதந்திர தினத்தையொட்டி எதிர்வரும் 6ஆம் திகதி புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விடுதலை செய்யப்படுவர் என்றும், இதற்கான விசேட வைபவம் வவுனியாவில் இடம்பெறும் என்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.இந்நிலையில், புனர்வாழ்வளிக்கப்பட்ட 500 முன்னாள் போராளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் அண்மையில் வவுனியாவில் இடம்பெற்றது.

யாழில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிப்பு

யாழ். மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.கிராமப் புறங்களிலேயே வேட்பாளர்கள் பலரும் பிரசாரங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். வீடு சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

செவ்வாய், 18 ஜனவரி, 2011

யாழ் கச்சேரி நல்லூரில் 65பவுண் நகைகள் கத்திமுனையில் கொள்ளை

யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் பகுதி வீடொன்றில் ஓட்டைப் பிரித்து உள் நுழைந்த ஐவர் கொண்ட திருடர் குழுவொன்று அங்குள்ளவர்களை மிரட்டி 65 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,வேலுப்பிள்ளை வேதநாயகம் வயது 70 என்பவரது வீட்டிற்குள் சென்ற திருடர் குழுவே அவரது மனைவி வேதநாயகம் பரிமளகாந்தி (வயது 62), அவரது மகளான வேதநாயகம் அர்ச்சனா (வயது21) இவர்களைக் கத்தி முனையில் வைத்தே நகைகளைகொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

படையினரின் சோதனைகள் சுற்றிவளைப்புக்கள் அதிகரிப்பு!!

மானிப்பாயில்  துப்பாக்கிப் பிரயோகத்தைத் தொடர்ந்து நவாலிப் பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன் மானிப்பாய் நவாலி பிரதான வீதிகளில் இராணுவத்தினர் கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மானிப்பாய் சங்கரப்பிள்ளை வீதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அவ் வீட்டின் குடும்பத்தலைவி தெரிவிக்கையில்
,

மாவை சொல்வது அப்பட்டமான பொய் – பத்மினி சிதம்பரநாதன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கிஸ்தர் பத்மினி சிதம்பரநாதனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ள கருத்து முற்றுமுழுதான பொய் என்று பத்மினி சிதம்பரநாதன்  தெரிவித்துள்ளார்.கூட்டுச் சேர்வது தொடர்பில் பத்மினி சிதம்பரநாதனுடனும் பேச்சு நடத்திவருகின்றோம் என்று மாவை சேனாதிராசா தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வயாவிளான் கிழக்குப்பகுதிகளில் மீளக்குடியமர்த்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை

வயாவிளான் கிழக்குப்பகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்பட்டமைக்கான சான்றிதழ் கிடைக்கப்பெற்றபோதும் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அந்தப்பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்றுதெரிவிக்கப்படுகின்றது.வலி.வடக்கு பிரதேசங்க ளில் மக்களை மீளக்குடிய மர்த்துவதற்கான நடவடிக்கைகள் கடந்த வருடம் நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அழைப்பை அலட்சியம் செய்தார் சந்திரிகா

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் அலட்சியம் செய்துவருவதாக ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர் தகவல் தெரிவித்துள்ளார்.சாட்சியமளிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழிந்த நிலையிலும் அது தொடர்பில் அவர் இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. அத்துடன் எதிர்வரும் காலங்களிலும் அவர் பதிலளிக்கவோ, சாட்சியமளிக்கவோ தயாராக இல்லை என்பதாகச் சந்திரிகாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரகசிய சுவிஸ் வங்கிக்கணக்கு விபரங்களை வெளியிடவுள்ள விக்கிலீக்ஸ்

அதிரடியாக இரகசியங்களை வெளியிட்டுவரும் இணையத்தளமான விக்கிலீக்ஸிடம் தற்போது சுமார் 2000 சுவிஸ் வங்கிக்கணக்காளர்களின் இரகசிய கணக்கு விபரங்கள் அடங்கிய 2 இறுவட்டுக்கள் கிடைத்துள்ளதால் இவை கூடிய விரைவில் வெளியாகலாம் எனஎதிர்ப்பார்க்கப்படுகின்றது.இந்த இறுவட்டுக்கள் சுவிஸ் வங்கியின் முன்னாள் உழியர்களில் ஒருவரான ருடோல்ப் எல்மாராலேயே அசாஞ்சேவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மெனிக்பாம் முகாமில் இருந்து பெண்கள் கொழும்புக்குப் பலவந்தமாக அனுப்பிவைப்பு

கொழும்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவதற்காக வவுனியா மெனிக்பாம் முகாமில் இருந்து பெண்களும் சிறுமியரும் பலவந்தமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 18பேரும், திங்களன்று 30 பேரும் வவுனியாவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 17 ஜனவரி, 2011

இலங்கை அகதிகளின் வருகையை தடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை .கனடா அரசாங்கம்

கனடாவுக்கு செல்லவுள்ளதாக கூறப்படும் மேலும் 400 இலங்கை அகதிகளின் வருகையை தடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒட்டாவா சிட்டிசன் பத்திரிகை, கனேடிய அரச அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தென் கிழக்காசிய நாடு ஒன்றில் இரண்டு இரண்டு தனித்தனி கப்பல்கள் மூலம் 400 தமிழ் அகதிகள் வரையில் கனடா நோக்கி வருவதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தடுப்பது குறித்து தற்போதே கனடா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

பத்திரிகை ஒன்றே மக்களைத் தவறாக வழிநடத்துகின்றது .. டக்ளஸ்.

யாழ். குடாநாட்டில் உள்ள பத்திரிகை ஒன்றே மக்களைத் தவறாக வழிநடத்துகின்றது என்று நேற்றுக் குற்றஞ்சாட்டினார் அமைச்சர் டக்ளஸ். வசாவிளானில் புனரமைக்கப்பட்ட கட்டத்தைத் திறந்து வைத்துப் பேசிய அவர், பத்திரிகை ஒன்றைச் சாடுவதில் தனது மூன்றரை நிமிடப் பேச்சின் கணிசமான பகுதியைச் செலவிட்டார். "வழமைபோல் சில பத்திரிகைகள் மக்களைத் தவறாக வழி நடத்தி வருகின்றன. இதற்கு முன்னர் வந்தவேகத்தில் திரும் பியது வசாவிளான் மகாவித்தியாலயம் என முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது அந்தப்பத்திரிகை

பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை பயணம்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஷ் கயானி இலங்கை வரவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.விசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க – கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதியை இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய விமான நிலையத்தில் வரவேற்கவுள்ளார்.

பொன்சேகா நோய் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளார்

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவரது தலைமுடி உதிர்வதுடன், சருமநோய் ஏற்பட்டுள்ளதாகவும்சில வருடங்களுக்கு முன்னர்  இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் காரணமாக சரத் பொன்சேகா பாதிப்படைந்ததாகவும் சிறைச்சாலை ஆணையாளர் வி.ஆர்.டி.சில்வாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, சரத் பொன்சேகாவிற்கு அவசியமாக சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் ;யாழ்.மானிப்பாயில்

யாழ். மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியில்   இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த சம்பவத்தில் யாழ். மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்த 31 வயதான சிறிபாலசுந்தரம் நினோஷா என்பவரே பாடுகாயமடைந்துள்ளார்.
இவர் வீட்டு வாசலில் முன்னால் நின்ற போது இவர் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்

சனி, 15 ஜனவரி, 2011

ஊரிக்காடு கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது

வல்வெட்டித்துறை ஊரிக்காடு இராணுவ முகாமுக்கு பின்புறமாக கடற்கரையில்  ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.சுமார் 45 வயது மதிக்கத்தக்க காக்கி நிற அரைக்காற்சட்டையுடன் காணப்படும் சடலத்தின் இடது கையில் "கே. குப்புசாமி" என்று பச்சை குத்தப்பட்டுள்ளது.5 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட இந்தச் சடலத்தின் வலது கால் தொடையில் நட்சத்திர அடையாளமும் காணப்படுகிறது என்றும் தலைப்பகுதி மோசமாக அழுகி சிதைந்துள்ளது என்றும் வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தச் சடலம் இந்திய மீனவர் ஒருவருடையதாக இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது

கூட்டமைப்பு எங்கே செல்கிறது!? ஆனந்த சங்கரி, வரதாஜப்பெருமாள், சித்தார்த்தனுடன் கூட்டு!

தமிழர்விடுதலைக்கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் வரதர் அணித் தலைவர் வரதாஜப்பெருமாள், புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் சிவாஜிலிங்கம் உட்பட்டவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கான தீவிர முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ் அரங்கத்தில் செயற்பட்டுவந்த குறித்த கட்சிகளின் குழுவினருக்கும் கூட்டமைப்புக் குழுவினருக்கும் இடையிலான குழு நிலைச் சந்திப்புக்கள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த விடயத்தில் உடன்பாடு எட்டுவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை பயணம்!

இந்திய விமானப்படைத் தளபதி  எயார் சீப் மார்சல் ஜீ.வீ.நயிக் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பயணத்தின் போது இரு நாட்டு பாதுகாப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக விமானப்படைத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய விமானப்படை தளபதி தனது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.இரண்டு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை பயணமாகவுள்ள அவர் இலங்கையில் காணப்படும் இராணுவ முகாம்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவி ஏற்பின் போதே இந்தியாவிற்கு சவால் விடுத்தார் இலங்கை கடற்படைத் தளபதி!

இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய மீனவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை முடிந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு புதிய கடற்படைத் தளபதி சோமதிலக திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார்.புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போதே அவர் சவால் விடுத்துள்ளதாக தெரியவிக்கப்படுகின்றது.இலங்கையின் 17ஆவது கடற்படைத் தளபதியாக சோமதிலக திஸாநாயக்க பாதுகாப்பு செயலாளரால் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சில நாட்களின் முன்னர் இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இலங்கை செல்லத் தயாராகும் ஐ.நா நிபுணர் குழு!

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து தனக்கு ஆலோசனை வழங்கவென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழு இலங்கை வர தயாராகி வருவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.இலங்கை வருவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தி அதற்கான திட்டங்களை நிபுணர் குழு செயற்படுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள பான் கீ மூன் கூறியுள்ளார்.

80 முன்னாள் போராளிகள் யாழில் விடுதலை

யாழ்ப்பாணத்தில் யாழ் மாவட்ட செயலகம்,, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், யாழ் பல்கலைக்கழகம், கல்வித் திணைக்களம் மற்றும் சமூக அமைப்புக்கள் ஆகியவற்றின் அனுசரணையோடு தைப்பொங்கல் கலாசார விழா நடைபெற்றபோது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 80 முன்னாள் போராளிகள் உறவினர்களிடம் ஓப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

வியாழன், 13 ஜனவரி, 2011

புலிகளின் தாக்குதலில் தப்பியவரே புதிய கடற்படைத் தளபதி

17வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் எஸ்.திஸாநாயக்க தமிழீழ விடுதலைப் புலிகள் 1995ஆம் ஆண்டு மேற்கொண்ட தாக்குதல் ஒன்றில் உயிர் தப்பியவர் எனத் தெரிய வருகிறது.1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த “ரணசுறு” என்ற சீனத் தயாரிப்புப் பீரங்கிப் படகின் மீது கடற்கரும்புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் போதே இவர் உயிர் தப்பியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது இவர் அப்பீரங்கிப் படகில் இருந்தார். இவருடன் இருந்த பல கடற்படை அதிகாரிகளும் மற்றும் கடற்படையினரும் இத்தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டிருந்தனர்.

கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்,

கிட்டு ஒரு ஓர்மமான போராளி. அவரது வீரம், விவேகம், வேகம், துணிச்சல் மக்களிடையே பிரமிப்பை ஊட்டியது. எண்பது முற்பகுதியில் மக்கள் இராணுவத்துக்குப் பயந்து மூலையில் பதுங்கி நடுங்கி ஒடுங்கி இருந்த காலம். "ஆமி கோட்டையில் இருந்து வெளிக்கிடுறானாம்" என்ற செய்தி காற்றில் வந்தால் போதும். கிட்டு காற்றினும் வேகமாகச் சென்று வெளிக்கிட்ட இராணுவத்தை மறுபடியும் கோட்டைக்குள் அடித்துத் துரத்துவார். அப்படி அடித்துத் துரத்து மட்டும் ஓயமாட்டார். பலாலி, நாவற்குழி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஆனையிறவு இப்படி எந்த முகாமில் இருந்து இராணுவம் புறப்பட்டாலும் கிட்டு அங்கு தனது போராளிகளுடன் நிற்பார். கிட்டு களத்தில் நிற்கிறார் என்றால் மக்களுக்கு இனந்தெரியாத துணிவு எங்கிருந்தோ வந்துவிடும்.

உரும்பிராயில் கிணற்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

உரும்பிராய் யோகபுரம் பகுதியில் கிணற்றுக்குள் இருந்த சடலம் நேற்று மீட்கப்பட்டு போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது.குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கமைவாக குறித்த கிணற்றை இறைத்தபோது கிணற்றுக்குள்ளிருந்து கையடக்கத் தொலைபேசி மற்றும் சறம் என்பன மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இது காணாமற் போன தமது உறவினரென உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டது இச் சம்பவத்தில் உரும்பிராய் யோகபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் அமல்ராஜ் 35 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவர் கடந்த 3ம் திகதி காணாமற் போயுள்ளதாக அவரது சகோதரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினைச் செய்துள்ளமை. குறிப்பிடத்தக்கது மனைவி வன்னியில் இடம்பெற்ற இறுதிநேர யுத்தத்தின்போது ஷெல்வீச்சில் பலியானதாகவும் குறித்த நபர் தனது பிள்ளைகளுடன் தாயாருடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருவதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர் கொலை: இலங்கையிடம் இந்தியா புகார்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர், இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, இது குறித்து, இலங்கையிடம் இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது. டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் இது தொடர்பாக முறைப்படி புகார் அளித்திருக்கிறார்கள். நாகை, புதுக்கோட்டை மாவட்டங்ளைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று ஜெகதாப்பட்டினத்திலிருந்து விசைப்படகில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்கள். அப்போது, இந்தியக் கடல் எல்லைக்குள்  இலங்கைக் கடற்படை நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் பாண்டியன் என்பவர் உயிரிழந்ததாகவும் மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

புதன், 12 ஜனவரி, 2011

மழை மட்டக்களப்பு மற்றும் அப்பாறையில் கடுமையான பாதிப்புகள்:பத்து லட்சம் பேர் பாதிப்பு

இலங்கையில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பத்து லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போதுவெளியாகியுள்ளதகவல்கள்தெரிவிக்கின்றன.மட்டக்களப்பு மற்றும் அப்பாறையில் கடுமையான பாதிப்புகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் மணிக்கு மணி அகதிகளுக்கான முகாம்களின் தேவை அதிகரித்து வருகின்றது என்று இலங்கை அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.அங்கு பால், குழந்தைகளுக்கான உணவு, கொசு வலைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள் ஆகியவற்றுக்கான உடனடி தேவை ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா? குமுறுகிறார் செங்கடல் பட இயக்குநர் லீனா மணிமேகலை

இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாது என்று நிபந்தனையே விதிக்கும் அளவுக்கு மோசமான நிலைமைக்குள் படைப் பாளிகளைச் சிறைப்படுத்தப் பார்க்கிறது இந்திய அரசு இவ்வாறு  "செங்கடல்" படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலை குமுறுகிறார்.துயரத்தில் தவிக்கும் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழ் மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை  இந்திய  தமிழக அரசுகளின் நிலைப்பாட்டை விமர்சிப்பதால் "செங்கடல்" படத்துக்கு சென்னை தணிக்கைக் குழு  தடை விதித்துள்ளது. இப்போது படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பும் முடிவில் உள்ளார் இயக்குநர் லீனா

தமிழ் தேசிய கூட்டமைப்பு - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தற்போதைய அரசியில் சூழ்நிலைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், மற்றும் செல்வம் அடைக்கல நாதன், ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கிம் மற்றும் பொது செயலாளர் ஹசன் அலி ஆகியேர் பங்கு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல்

ஹம்பாந்தோட்டை நகரில் சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக அபிவிருத்தி திட்டம் தொடர்பில் இந்தியா கவலை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அமெரிக்க இரகசிய இராஜதந்திர ஆவணங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸின் பிந்திய வெளியீடுகளில் இந்த விடயம் தொடர்பான தகவல்கள் அடங்கியுள்ளதாக ஏஷியன் ட்ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி 2007 ஆம் ஆண்டு என திகதியிடப்பட்ட இராஜதந்திர தகவல் பரிமாற்ற கோப்பில் இது தொடர்பான தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன.

வடபகுதி யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு...இராணுவத்தினர் பிரசாரம்

தென்பகுதி ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் வடபகுதி யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத்தரப்படும் என்றும் அதற்காக யுவதிகள் தேவைப்படுவதாகவும் நாட்டின் வடபகுதியில் இராணுவத்தினர் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய பிரசாரங்கள் எத்தகைய உத்தரவாதமும், ஒப்பந்தமும்,வெளிப்படைத்தன்மையும்இன்றிமேற்கொள்ளப்படுவதாகவும் மக்கள் இது குறித்து விழிப்பாக இருக்குமாறும் வடபகுதியில் அமைந்துள்ள சிவில் அமைப்புக்கள் கேட்டுள்ளன. இலங்கை இராணுவத்திலுள்ள பல்வேறு தரத்தையும் சேர்ந்த அதிகாரிகள் வடபகுதியின் யாழ்ப்பாணம்,வன்னி மற்றும் மீள் குடியேறிய கிராமப்புறங்களுக்குச் சென்று இவ்வாறான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே!!!!!

ஐந்தரை மணி நேரம் தொடர்ந்து பேச்சாளர்கள் முழங்கிக் கொண்டே இருந்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கட்டிப்போட்டிருந்தது, 'என்ன செய்யலாம் இதற்காக?’ என்ற புத்தகம்! சென்னையில் கடந்த 9-ம்தேதி நடந்த இந்த புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில், ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தவர் நிமல்கா பெர்​னாண்டோ.
இலங்கையில் இருந்து வந்திருந்த இவர், பிறப்பால் சிங்களவர். பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரான நிமல்கா பேசப் பேச, 'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே?’ என்ற கவலை எல்லோர் முகத்திலும் முளைத்தது.இலங்கை மனித உரிமைப் போராளி நிமல்காவின் ஆங்கிலப் பேச்சில் அழுத்தமான அரசியல் பொறி தெறித்தது. ''நான் தமிழில் பேச முடியாமல் இருப்பதற்கு முதலில் வருந்துகிறேன்.

செவ்வாய், 11 ஜனவரி, 2011

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சீன உதவியில் "தயார்நிலை" முகாம்:வலிகாமத்தின் ராணுவத் தளமாகின்றது

முக்கிய மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒன்றாக இருந்த கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் வலிகாமத்தின் முக்கிய ராணுவத் தளமாகின்றது. மிகப் பெரிய படைத்தளம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தர அரையிறுதி தகரங்களைக் கொண்டு இந்தத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மாவீரர் துயிலும் இல்லத்தின் முகப்பு நுழைவாயிலை இடித்து வீழ்த்தியுள்ள படைத்தரப்பு அதனை ராணுவ தளத்திற்கேற்ற வகையில் வடிவமைத்தும் இருக்கின்றது. இப்பகுதிகளில் பொதுமக்கள் போக்குவரத்தில் ஈடுபடவும் கடந்த சில வாரங்களாக தடை விதிக்கப்பட்டும் இருந்தது. 

திங்கள், 10 ஜனவரி, 2011

யாழ் சுபாஸ் ஹோட்டல் உரிமையாளரிடம் கையளிப்பு !! சிறீதர் தியேட்டர் கையளிக்கப்படுமா?

யாழ்ப்பாணம் சுபாஸ் ஹோட்டல் இராணுவ முகாம் சித்திரவதைகளுக்கு பெயர் போனது அதே போல சிறிதர் தியேட்டர் ஒட்டுக்குழு அதிபதி டக்ளஸ் இன் அசுரத்தனத்திற்கும் அனியாயங்களுக்கும் பெயர் போனது. போர் முடிந்தும் மேற்கூறிய இடங்களை விட்டு டக்ளஸ் குழுவும் இராணுவமும் இன்னமும் அகலவில்லை. இந்த சூழலில் இப்போ இராணுவம் சுபாஸ் ஹோட்டலை 15 ஆம் திகதி உரிமையாளரிடம் கையளிக்கப்போவதாக கூறியுள்ளது. இதே போல சிறிதர் தியேட்டரை டக்ளஸ் விட்டு விலகுவாரா???